×

காண்ட்ராக்டர் வீட்டில் ₹5 லட்சம், நகை திருட்டு

காரிமங்கலம், மே 3: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பைபாஸ் ரோடு, அகரம் பிரிவு ரோடு அருகே வசித்து வருபவர் வெங்கடேசன்(32), காண்ட்ராக்டரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த 30ம்தேதி காலை, வெங்கடேசன் தொழில் சம்பந்தமாக வெளியே சென்றுள்ளார். அவரது பெற்றோரும் வெளியில் சென்று விட்டனர். வெங்கடேசன் மதியம் வீட்டுக்கு வந்தபோது, வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே வைத்திருந்த சீட்டு பணம் ₹5 லட்சம் மற்றும் 5 பவுன் நகை திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் காரிமங்கலம் போலீசில் புகார் தெரிவித்தார்.

ஆனால் போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, நேற்று முன்தினம் வெங்கடேசன், தர்மபுரி எஸ்பி அலுவலகத்துக்கு உறவினர்களுடன் சென்று எஸ்பி., ஸ்டீபன் ஜேசுபாதத்திடம் புகார் மனு கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில், காரிமங்கலம் போலீசார், நேற்று முன்தினம் மாலை, வெங்கடேஷின் வீட்டுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post காண்ட்ராக்டர் வீட்டில் ₹5 லட்சம், நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Venkatesan ,Akaram Division Road, Karimangalam Bypass Road, Dharmapuri District ,Dinakaran ,
× RELATED கட்டிட மேஸ்திரி வீட்டில் 10 கிராம் நகை திருட்டு